என் வாழ்க்கைப் பயணத்தின் இரண்டாவது பத்தாண்டு 1960களில் தொடங்கிற்று
1960களிலிருந்து 1970வரையிலான காலகட்டம் - பாலர்பருவத்துக்கும்
வாலிபப்பருவத்துக்கும் இடையிலான பருவம்தொடங்கி- இருபதுவயது வாலிபனாக நான்
மாறிக்கொண்டிருந்த இளமைக்காலங்கள்.
அந்தக் காலகட்டத்தில் என்னைப்போல் சிறுவர்களாக இளைஞர்களாக இருந்தவர்கள் தமிழ்க் கலை இலக்கிய
உலகத்தின் ஒருபொற்காலத்தில் வாழ்ந்ததாகப் புளகாங்கிதம் கொள்ளலாம்.
உலகத்தின் ஒருபொற்காலத்தில் வாழ்ந்ததாகப் புளகாங்கிதம் கொள்ளலாம்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் வித்தகர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்
முன்னணியில் நின்று முகம்காட்டிய பொழுதுகள் அவை. தமிழ்க் கலை இலக்கிய உலகம் எண்ணற்ற கலை இலக்கியவாதிகளை அறிமுகம்கொண்ட காலம் அது என்று தயங்காமல் சொல்வதற்கு சாட்சியங்களாக ஏராளமான கலை இலக்கியப்படைப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் அந்தக் காலகட்டத்தை வியந்துரைக்கிற பலரை நாம் காணலாம்.
முன்னணியில் நின்று முகம்காட்டிய பொழுதுகள் அவை. தமிழ்க் கலை இலக்கிய உலகம் எண்ணற்ற கலை இலக்கியவாதிகளை அறிமுகம்கொண்ட காலம் அது என்று தயங்காமல் சொல்வதற்கு சாட்சியங்களாக ஏராளமான கலை இலக்கியப்படைப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் அந்தக் காலகட்டத்தை வியந்துரைக்கிற பலரை நாம் காணலாம்.
பழமை என்றும் இனிமை என்று இன்று பலரால் பகிரப்படுகின்ற எத்தனையோ கலைவடிவங்கள்
புத்தம்புதியனவாய் மணம்பரப்பியது அந்தக் காலகட்டத்தில்தான்.!
புத்தம்புதியனவாய் மணம்பரப்பியது அந்தக் காலகட்டத்தில்தான்.!
அந்தப் பத்தாண்டுகளின் ஆரம்ப வருடங்கள்....
உலகம் புரிகிற சிறுவனாய் உருமாறிக்கொண்டிருந்தேன் நான்
உலகம் புரிகிற சிறுவனாய் உருமாறிக்கொண்டிருந்தேன் நான்
மழைக் காலம் தொடங்கியிருந்தது!
பள்ளக் காணிகளில் வெள்ளம் தேங்கி நிற்க, ஒழுங்கைகளுக்குள்ளும் மேட்டிலிருந்து பள்ளம்நோக்கி
வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது..
பள்ளக் காணிகளில் வெள்ளம் தேங்கி நிற்க, ஒழுங்கைகளுக்குள்ளும் மேட்டிலிருந்து பள்ளம்நோக்கி
வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது..
வீட்டிலிருந்து புறப்பட்டால் பள்ளிக்கூடம் போவதற்குள் கால்கள் விறைத்துப் போய்விடும்.
அன்றைக்கும் சரியான அடைமழை..
அன்றைக்கும் சரியான அடைமழை..
மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, சற்று
ஓய்ந்திருந்த மழை, இடைவழியில் சடாரெனப் பொழிந்து என்னை நன்றாகவே
குளிப்பாட்டிவிட்டிருந்தது.
பெண்கள் அணியும் அரைப்பாவாடையைப்போல் முழங்கால்வரை தொளதொளக்கும் அரைக் காற்சட்டையும் முழங்கைகளைத் தொடும் அரைக்கைச் சட்டையும் மழைநீரில் ஊறிக் கனத்தன.
பெண்கள் அணியும் அரைப்பாவாடையைப்போல் முழங்கால்வரை தொளதொளக்கும் அரைக் காற்சட்டையும் முழங்கைகளைத் தொடும் அரைக்கைச் சட்டையும் மழைநீரில் ஊறிக் கனத்தன.
மழையில் நனைந்துவிடாதிருக்க புத்தகங்களை சட்டைக்குள் நுழைத்து நெஞ்சோடு
அணைத்துப் பிடித்தும் ஈரம் கசகசத்தது.
எட்டி நடக்க முடியாமல் ஈரக் காற்சட்டை இடைஞ்சல் கொடுத்தது.என்றாலும் நடையில் வேகம் காட்டினேன்.
அணைத்துப் பிடித்தும் ஈரம் கசகசத்தது.
எட்டி நடக்க முடியாமல் ஈரக் காற்சட்டை இடைஞ்சல் கொடுத்தது.என்றாலும் நடையில் வேகம் காட்டினேன்.
காலையில் பள்ளிக்கூடத்தில் சாப்பிட்ட ஒரு பணிஸ், குடித்த ஒருபேணி பால் இரண்டும் விரைவாகவே
செமிபாடடைந்திருந்தன.
வயிறு மெல்லிதாய்க் கிள்ளத் தொடங்கியிருந்தது.
வீட்டுப் படலையை நெருங்கியபோது பின்னால் விசில் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
மழைக்கோட்டுப் போட்டிருந்த தபால்காரர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
செமிபாடடைந்திருந்தன.
வயிறு மெல்லிதாய்க் கிள்ளத் தொடங்கியிருந்தது.
வீட்டுப் படலையை நெருங்கியபோது பின்னால் விசில் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
மழைக்கோட்டுப் போட்டிருந்த தபால்காரர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
மழைக்குள் நனையாதவாறு தபால் பைக்குள் மறைத்துவைத்திருந்த காகிதக் கட்டொன்றை எடுத்து
"இந்தா!" என்று என்னிடம் தந்தார்.
"இந்தா!" என்று என்னிடம் தந்தார்.
கையில் வாங்கும்போதே புரிந்துவிட்டது. அது கொழும்பிலிருந்து பெரியண்ணா அனுப்பிய கல்கி வார இதழ்கள்.
என் அக்கா கல்கியின் தீவிர வாசகி.
கல்கியின் எழுத்துக்களென்றால் உயிர் என்கிற மாதிரியானதொரு இரசனை.
என் அக்கா கல்கியின் தீவிர வாசகி.
கல்கியின் எழுத்துக்களென்றால் உயிர் என்கிற மாதிரியானதொரு இரசனை.
அப்பாவுக்குப் பிறகு எனக்கு கதைசொல்வது அக்காதான்.
ஆனால் அக்காவின் கதைகள் புதிய எழுத்தாளர்கள் எழுதுகிற புதிய கதைகளாக இருக்கும். பெரும்பாலும்
கதைச் சுருக்கங்களே.
தொடக்கத்தில் அக்காவுக்காகவே கொழும்பிலிருந்து கல்கி குமுதம் ஆனந்த விகடன் என்று அண்ணா
அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அக்காவின் கதைகள் புதிய எழுத்தாளர்கள் எழுதுகிற புதிய கதைகளாக இருக்கும். பெரும்பாலும்
கதைச் சுருக்கங்களே.
தொடக்கத்தில் அக்காவுக்காகவே கொழும்பிலிருந்து கல்கி குமுதம் ஆனந்த விகடன் என்று அண்ணா
அனுப்பிக் கொண்டிருந்தார்.
அக்காவின் புத்தகப் பைத்தியம் என்னையும் தங்கச்சியையும் தொற்றிக்கொண்டது.
சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுக்கள் என்று எல்லாப் புத்தகங்களிலும் தேடித் தேடி வாசிக்கப் பழகிக்கொண்டோம்.
கல்கியில் வெளியான தங்கமாம்பழம் மாயப்பந்து போன்ற கதைகள் எங்களைக் கவர்ந்துகொள்ள
அவ்வப்போது கையில் கிடைக்கும் புத்தகங்களை யெல்லாம் புரட்டிப் புரட்டி சிறுவர் பகுதிகளைத் தேட ஆரம்பித்தோம்.
சித்திரக்கதைகள் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கின.
சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுக்கள் என்று எல்லாப் புத்தகங்களிலும் தேடித் தேடி வாசிக்கப் பழகிக்கொண்டோம்.
கல்கியில் வெளியான தங்கமாம்பழம் மாயப்பந்து போன்ற கதைகள் எங்களைக் கவர்ந்துகொள்ள
அவ்வப்போது கையில் கிடைக்கும் புத்தகங்களை யெல்லாம் புரட்டிப் புரட்டி சிறுவர் பகுதிகளைத் தேட ஆரம்பித்தோம்.
சித்திரக்கதைகள் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கின.
இப்படியொரு காலகட்டத்தில் தான் இந்தக் கல்கி இதழ்களும் வந்தன..
தபால்காரர் தந்த புத்தகங்களோடு வீட்டுக்கு ஓடி அவசர அவசரமாக ஈரக்
"களிசானையும்" "சேட்"டையும் களைந்து இன்னொரு தொளதொள களிசானை
உடுத்திக்கொண்டு கல்கியைப் பிரித்து அதில் மூழ்கிப்போனேன்.
வெளியே மழையின் சலசலப்பு..
குசினிக்குள் சமைத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் சமையலின் வாசம்... சற்று முன்பு வயிற்றைக் கிள்ளிய பசி... எல்லாம் மறந்துபோக-
கல்கியோடு நான்...!
வெளியே மழையின் சலசலப்பு..
குசினிக்குள் சமைத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் சமையலின் வாசம்... சற்று முன்பு வயிற்றைக் கிள்ளிய பசி... எல்லாம் மறந்துபோக-
கல்கியோடு நான்...!
அப்பா என் அருகில் இருந்து அவர் எழுதாத கதைகளைச் சொல்லித் தந்ததுபோல -
கதைகளை எழுதியவர்கள் அருகில் இல்லாமல் அவர்கள் சொல்லும் கதைகளுக்குள் நான் இலயித்துப் போயிருந்தேன்..
கதைகளை எழுதியவர்கள் அருகில் இல்லாமல் அவர்கள் சொல்லும் கதைகளுக்குள் நான் இலயித்துப் போயிருந்தேன்..
யார் எழுதினார் என்ன எழுதினார் என்றில்லாமல் எழுத்துக்களில் மட்டுமே மூழ்கிப்போன காலங்கள் அவை.
"கல்கி ஆசிரியர்தான் "கல்கி" என்ற பெயரில் கதை எழுதிறவர்!" என்று அக்கா சொல்லுவா.
"நல்லா எழுதுவார்.. அவரின்ரை கதையளை எடுத்துப் படிக்க வெளிக்கிட்டால் முடிக்காமல் வைக்க மனம்வராது!" என்பா.
"கல்கி எண்டால் என்னக்கா அர்த்தம்?"
"கல்யாணசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி எண்ட இரண்டு பேரின்ரை சுருக்கம்தான் கல் கி!" என்றா அக்கா.
"நல்லா எழுதுவார்.. அவரின்ரை கதையளை எடுத்துப் படிக்க வெளிக்கிட்டால் முடிக்காமல் வைக்க மனம்வராது!" என்பா.
"கல்கி எண்டால் என்னக்கா அர்த்தம்?"
"கல்யாணசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி எண்ட இரண்டு பேரின்ரை சுருக்கம்தான் கல் கி!" என்றா அக்கா.
"மகாபாரதத்திலை கல்கி அவதாரம் எண்டு ஒண்டு வருகுதெல்லே..நான் அதாக்கும் எண்டு நினைச்சன்!"
"ம்.. அப்பிடியும் சொல்லலாம்... தசாவதாரத்திலை கடைசி அவதாரம் கல்கி அவதாரம்தான்!"
"அதுக்குப்பிறகு உலகம் இருக்காதாம்!"
"ஆர் சொன்னது அப்பிடி... உலகத்திலை பிரளயங்கள் வரும் ஆனா உலகம் அழியாது! கெட்டவையள்
அழிஞ்சு நல்லவையள்மட்டும் இந்த உலகத்திலை இருப்பினம்!"
"அப்ப இப்போதைக்கு பிரளயம் வராது அக்கா.. ஏனெண்டால் இப்ப எல்லாரும் நல்லவைதானே
இருக்கினம்..?"என்றேன்.
அக்கா சிரித்தா.
"கல்கி அவதாரம் வருகுதோ இல்லையோ கல்கி புத்தகம் தொடர்ந்து வரும்!" என்றேன் நான்.
"ம்.. அப்பிடியும் சொல்லலாம்... தசாவதாரத்திலை கடைசி அவதாரம் கல்கி அவதாரம்தான்!"
"அதுக்குப்பிறகு உலகம் இருக்காதாம்!"
"ஆர் சொன்னது அப்பிடி... உலகத்திலை பிரளயங்கள் வரும் ஆனா உலகம் அழியாது! கெட்டவையள்
அழிஞ்சு நல்லவையள்மட்டும் இந்த உலகத்திலை இருப்பினம்!"
"அப்ப இப்போதைக்கு பிரளயம் வராது அக்கா.. ஏனெண்டால் இப்ப எல்லாரும் நல்லவைதானே
இருக்கினம்..?"என்றேன்.
அக்கா சிரித்தா.
"கல்கி அவதாரம் வருகுதோ இல்லையோ கல்கி புத்தகம் தொடர்ந்து வரும்!" என்றேன் நான்.
-சின்னாச்சியின்ரமோன்


Keine Kommentare:
Kommentar veröffentlichen